நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க காங். புதிய வியூகம்

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்டதால் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகம் வகுத்துள்ளது.

Update: 2018-08-25 13:24 GMT
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி விட்டதால், தேசிய கட்சிகள் சுறு சுறுப்படைந்துள்ளன. அந்த வகையில் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ், நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள புதிய வியூகம் வகுத்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஏ.கே. அந்தோணி, குலாம் நபி ஆசாத், ப. சிதம்பரம் உள்ளிட்ட 9 பேர் கொண்ட உயர் மட்டக்குழுவை, ராகுல்காந்தி நியமித்துள்ளார். இது தவிர, தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவில் 19 பேரும்,  பிரசார குழுவில், 13 பேரையும் ராகுல்காந்தி நியமித்து உள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் அசோக் கெலாட் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்