நாடாளுமன்ற வளாகம் அருகே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போராட்டம்

விவசாயிகள் பிரச்சனை, நம்பிக்கையில்லா தீர்மானம், எஸ்.சி. எஸ்.டி சட்டம் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தல்

Update: 2018-04-05 10:46 GMT
டெல்லியில் நாடாளுமன்ற வளாகம் அருகே, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாதி அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வங்கி முறைக்கேடு, விவசாயிகள் பிரச்சனை, நம்பிக்கையில்லா தீர்மானம், எஸ்.சி. எஸ்.டி சட்டம் உள்பட பல்வேறு பிரச்சனைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்