இந்தியாவில் புதிய ரக கார் தயாரிப்புகள் நிறுத்தம் - டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் அறிவிப்பு
இந்தியாவில் புதிய கார்கள் எதையும் அறிமுகப்படுத்தப் போவதில்லை எனவும், தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யப்போவதில்லை எனவும் டொயோட்டா நிறுவனம் அறிவித்துள்ளது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;
ஜப்பானிய கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா இந்தியாவில் கிர்லோஸ்கர் குழுமத்துடன் இணைந்து கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனத்தின் இன்னோவா உள்ளிட்ட கார்கள் இந்திய சந்தையில் பெரும் வரவேற்பை பெற்றன. டிராவல்ஸ் நிறுவனங்களிலும், தனி நபர்களின் செல்வாக்கு குறியீடாகவும் டொயோட்டா தயாரிப்புகள் இந்தியாவில் வலம் வருகின்றன.
இந்தியாவில் குவாலிஸில் துவங்கிய டொயோட்டாவின் பயணம் இன்னோவா, இன்னோவா கிரிஸ்டா என அடுத்தடுத்த அவதாரங்களை எடுத்து வருகிறது.
வசதிக்கு இன்னோவா என்றால் சொகுசுக்கு பார்ச்சூனர் என இந்நிறுவன கார்களுக்கு இந்திய சந்தையில் இருக்கும் வரவேற்பே தனிதான்.