முல்லைப்பெரியாறு அணை தொடர்பான வழக்கில் கேரள அரசின் கோரிக்கையை நிராகரிப்பு - உச்சநீதிமன்றம்
முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு கருதி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் கேரளாவை சேர்ந்த ஜாய் ரசூல் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பு கருதி முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் கேரளாவை சேர்ந்த ஜாய் ரசூல் பொதுநல வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அடங்கிய அமர்வு நேற்று வழங்கிய உத்தரவில் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்கக் கோரும் மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தனர். மேலும் நீர் மட்டத்தை உயர்த்துவது மற்றும் குறைப்பது குறித்து அணை பாதுகாப்பு துணைக்குழு முடிவெடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.