13-வது நாளாக ஹர்திக் பட்டேல் உண்ணாவிரதம் - ஹர்திக் பட்டேல் எடை அதிகரிப்பு என தகவல்

பேச்சுவார்த்தை நடத்த குஜராத் அரசுக்கு 24 மணி நேர கெடு

Update: 2018-09-05 23:34 GMT
குஜராத் மாநிலத்தில் பட்டிதார் சமூகத்துக்கு இடஒதுக்கீடு மற்றும் விவசாய கடனை தள்ளுபடி செய்யக்கோரி பட்டிதார் அனாமத் அந்தோலன் சமீதி அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஹர்திக் பட்டேல் கடந்த மாதம் 25 ஆம் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று உண்ணாவிரதப் போராட்டம் 13-வது நாளை எட்டியுள்ள நிலையில், அவரது எடை 20 கிலோ குறைந்ததாக வெளியான செய்தி தொடர்பாக சிலர் சந்தேகத்தை எழுப்பியுள்ளனர். ஹர்த்திக் பட்டேல் தனது ரத்த மற்றும் சிறுநீர் மாதிரிகளை சோதனைக்கு தரவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, 24 மணி நேரத்திற்குள் பேச்சுவார்த்தைக்கு குஜராத் அரசு முன்வராத நிலையில், தண்ணீர் குடிப்பதையும் ஹர்த்திக் பட்டேல் நிறுத்த முடிவு செய்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்