இந்தியா திவாலாகும் நிலைக்கு காரணம் காங்கிரஸ் கட்சி - அமைச்சர் தர்மேந்திர பிரதான்

பெட்ரோல், டீசல் விலை குறித்து காங்கிரஸ் கட்சி பொய் சொல்லி வருவதாகவும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாகவும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-03 03:59 GMT
குஜராத் மாநிலம் சூரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், பெட்ரோல், டீசல் விலை உயர்வால் சர்வதேச கரன்சிகள் மதிப்பும் சரிந்து உள்ளதாகவும், தெரிவித்தார். எரிபொருள் விலையை உயர்த்த வேண்டும் என்ற ஈரான் நாட்டின் நிலைப்பாடும் தான் விலை உயர்வுக்கு காரணம் என்று தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். 

வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருளின் விலை நிர்ணயம், இறக்குமதி செய்பவரின் கையில் இல்லை என்றும் தெரிவித்த தர்மேந்திர பிரதான், நாட்டை திவாலாக்கும் நிலைக்கு கொண்டு சென்றதே காங்கிரஸ் கட்சி தான் என்றும் குற்றம்சாட்டினார்.
Tags:    

மேலும் செய்திகள்