நேபாள சுற்றுப்பயணம் முடித்து திரும்பினார் மோடி

இதையடுத்து, நேபாளத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு டெல்லிக்கு பிரதமர் மோடி திரும்பினார்.

Update: 2018-09-01 05:16 GMT
நேபாளத்தில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு டெல்லிக்கு பிரதமர் மோடி திரும்பினார். மாலையில் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் புறப்பட்ட அவர், நேற்று இரவு 8.30 மணி அளவில்  டெல்லி வந்து சேர்ந்தார். முன்னதாக, நேபாளத்தில் உள்ள தில்கங்கா பகுதியில் உள்ள பசுபதிநாத் கோவிலுக்கு பிரதமர் மோடி சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்த மோடி, அங்குள்ள தர்மசாலாவில் நடைபெற்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். 
Tags:    

மேலும் செய்திகள்