ஓணம் பண்டிகையையொட்டி படகு போட்டி

கேரள மாநிலத்தில் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும் படகு போட்டி, இந்த ஆண்டு பெயரளவில் நடைபெற்றது.

Update: 2018-08-31 02:02 GMT
கேரள மாநிலத்தில் ஆண்டுதோறும் வெகுவிமரிசையாக நடைபெறும் படகு போட்டி, இந்த ஆண்டு  பெயரளவில் நடைபெற்றது. பத்தணந்திட்டை மாவட்டம் ஆறன்முளா பகுதியில் திருவோண பண்டிகையையொட்டி ஆண்டு தோறும் படகு போட்டி நடைபெறுவது வழக்கம். 

கனமழை மற்றும் வெள்ளத்தால் ஆறன்முளா பகுதி பெரும் பாதிப்பை சந்தித்ததால், படகு போட்டி பெயரளவிலான விழாவாக நடைபெற்றது. அந்த வட்டாரத்தில் உள்ள கிராமங்களிலிருந்து 25 படகுகள் மட்டுமே பங்கேற்றன.
Tags:    

மேலும் செய்திகள்