ஆந்திர மாநில தலைமை செயலகத்தில் மழைநீர் கசிவு

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வெகலம்புடியில் தற்காலிக தலைமை செயலகத்தில் மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது.

Update: 2018-08-21 07:39 GMT
ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள வெகலம்புடியில் தற்காலிக தலைமை செயலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது பெய்துவரும் கனமழையின் காரணமாக ஆந்திர சட்டமன்றத்தின் உள்ளே மழைநீர் கசிவு ஏற்பட்டுள்ளது. 

அதேபோல் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அறைகளிலும் மேலிருந்து மழைநீர் கசிந்து வருகிறது. கடந்த ஆண்டும் இதேபோல் மழைநீர் கசிவு ஏற்பட்டு இருந்த நிலையில், மழைநீர் கசிவுக்கு நிரந்தர தீர்வை ஆந்திர அரசு ஏன் ஏற்படுத்தவில்லை என்று எதிர்க்கட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்