ஸ்ரீசைலம் அணையில் இருந்து ஆர்ப்பரித்து வெளியேறும் தண்ணீர் : ரசித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

ஸ்ரீசைலம் அணையிலிருந்து ஆர்ப்பரித்து தண்ணீர் வெளியேறும் அழகிய காட்சியை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.

Update: 2018-08-20 16:24 GMT
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் கிருஷ்ணா நதியின் குறுக்கே ஸ்ரீசைலம் அணை அமைந்துள்ளது. அதன் மதகுகள் திறக்கப்பட்டு தற்போது வினாடிக்கு 2 லட்சத்து 40 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையிலிருந்து ஆர்ப்பரித்து தண்ணீர் வெளியேறும் அழகிய காட்சியை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்