3 வயது சிறுமியை 110 அடி ஆழ போர்வெல்லில் இருந்து பத்திரமாக மீட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்
பீகார் மாநிலம் முன்ஜர் பகுதியில் 110 அடி ஆழ் குழாய் கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது பெண் குழந்தையை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.
பீகார் மாநிலம் முன்ஜர் பகுதியில் 110 அடி ஆழ ஆழ் குழாய் கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது பெண் குழந்தையை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த அந்த குழந்தை, அருகில் உள்ள 110 அடி ஆழ போர்வெல் கிணற்றிற்குள் தவறி விழுந்தது. தகவல் அறிந்து அப்பகுதிக்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்பு படையினர் அந்த சிறுமியை நீண்ட நேர போராட்டத்திற்கு பின் பத்திரமாக மீட்டனர்.