45 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கிய பேருந்து - பயணிகளை பாதுகாப்பாக மீட்ட உள்ளூர்வாசிகள்
குஜராத் மாநிலம் அம்ரேலி பகுதியில் தரைப்பாலத்தை கடக்க முயன்ற பேருந்து 45 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கியது
குஜராத் மாநிலம் அம்ரேலி பகுதியில் தரைப்பாலத்தை கடக்க முயன்ற பேருந்து 45 பயணிகளுடன் வெள்ளத்தில் சிக்கியது. பயணிகளின் கூச்சல் சத்தத்தை கேட்டு அங்கு திரண்ட உள்ளூர்வாசிகள், அவர்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டனர். கடந்த சில தினங்களாக குஜராத்தில் மழை தொடர்வதால் பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது.