தென்மேற்கு பருவமழை தீவிரம் : கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

கோவை, நீலகிரி,தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Update: 2018-06-13 01:19 GMT
தென் மேற்கு பருவ மழை தீவரம் அடைந்துள்ளதையடுத்து,  கோவை, நீலகிரி,தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லார், வால்பாறை ஆகிய இடங்களில் தலா 13 சென்டிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. சென்னையை பொருத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்,தரை காற்று பலமாக வீசக் கூடும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.  தென் மேற்கு பருவ மழை தீவரம் அடைந்துள்ளதால், கோவை, நீலகிரி,தேனி, திருநெல்வேலி மற்றும் திண்டுக்கல் ஆகயி மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்