வரும் 18ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் - அகில இந்திய லாரி உரிமையாளர் சங்கம் அறிவிப்பு

வரும் 18-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Update: 2018-06-08 11:18 GMT
வரும் 18-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக அகில இந்திய தரைவழி போக்குவரத்து லாரி உரிமையாளர் சங்க பொதுச்செயலாளர் ரஜிந்தர் சிங், தமிழக லாரி உரிமையாளர் சங்க தலைவர் சுகுமார் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது டீசல், சுங்க வரி, 3ஆம் காப்பீட்டு தொகை உயர்வை திரும்ப பெற வேண்டும் என பல முறை வலியுறுத்தியும் எந்த பலனும் இல்லை என தெரிவித்தனர். எனவே இதனை கண்டித்து வரும் 18 ஆம் தேதி முதல் காலவரையற்ற  வேலை நிறுத்தத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டதாகவும் அவர்கள் கூறினர். 
Tags:    

மேலும் செய்திகள்