ஜெயலலிதா கண்ணாளனே பாடலை ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் கேட்டார் - கவிஞர் வைரமுத்து...
செக்கச் சிவந்த வானம்' பட பாடல் வெளியீட்டு விழாவில் மணிரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...
மணிரத்னம் இயக்கத்தில், நடிகர்கள் அரவிந்த் சாமி,சிம்பு, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா உள்ளிட்டோரின் நடிப்பில், ஏ. ரஹ்மான் இசையில் உருவாகி வரும் ' செக்க சிவந்த வானம்' திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பல்வேறு திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். விழாவில், இயக்குனர் மணிரத்னம், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் , கவிஞர் வைரமுத்து ஆகியோரிடம் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு அவர்கள் அளித்த சுவாரஸ்ய பதில்களை அளித்தனர்.
மணிரத்னம் பேசுகையில், அரவிந்த் சாமி மிகவும் நல்லவர்... எனக்கு பிடித்த பாடல் 'தமிழா தமிழா' என கூறினார்.
ஏ.ஆர். ரஹ்மான் பேசுகையில், எனக்கு பிடித்த பாடல் கண்ணாளனே என கூறினார்.
கவிஞர் வைரமுத்து பேசுகையில்,
* எங்கள் வேலையை கடினப்படுத்துவது மணிரத்னம்
* தேவையை அறிந்த கேட்டுப் பெறுபவர் மணிரத்னம்
* எனக்கு பிடித்த பாடல் 'உயிரே உயிரே' தான்
* கண்ணாளனே பாடலை ஜெயலலிதா ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவில் கேட்டார் என கூறினார்.