"கேஸ் இல்ல.. பெட்ரோல் இல்ல.. வாழவே முடியல" - கொந்தளிக்கும் மக்கள்

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஆட்சிக்கு எதிராக மக்கள் கொந்தளித்து பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்...
x

"கேஸ் இல்ல.. பெட்ரோல் இல்ல.. வாழவே முடியல" - கொந்தளிக்கும் மக்கள்

இலங்கையில் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி மக்களை விடுவிக்கக்கோரி போலீஸ் தலைமையகத்தை முற்றுகையிட முயன்றவர்களை போலீஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர்.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், ஆட்சிக்கு எதிராக மக்கள் கொந்தளித்து பல்வேறு நகரங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அண்மையில் அதிபர் மாளிகையை முற்றுகையிட முயன்ற அப்பாவி மக்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்கக் கோரி தலைநகர் கொழும்பில் உள்ள போலீஸ் தலைமையகத்தை நோக்கி போராட்டக்காரர்கள் பேரணியாக சென்றனர். கூட்டத்தை கலைக்க தண்ணீரை பீய்ச்சி அடித்த போலீஸார் கண்ணீர் புகைக் குண்டுகளையும் வீசியதால் அங்கு பதற்றம் நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்