மன்னிப்பு கேட்ட கிரீஸ் பிரதமர்
கிரீஸ் நாட்டில் பனிப்புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாததற்கு அந்நாட்டு பிரதமர் மிட்சோடகிஸ் ( Mitsotakis ) மன்னிப்பு கேட்டு உள்ளார்.
கிரீஸ் நாட்டில் பனிப்புயலை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்படாததற்கு அந்நாட்டு பிரதமர் மிட்சோடகிஸ் ( Mitsotakis ) மன்னிப்பு கேட்டு உள்ளார். கிரீஸை 2 நாட்களுக்கு முன்பு பனிப்புயல் தாக்கியது. இதனால், சாலைகள் எங்கும் பனிக்குவியல் காணப்படும் நிலையில், தலைநகர் ஏதென்ஸில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. பனியை அகற்றி போக்குவரத்தை சீர்செய்யும் பணி அங்கு முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டதற்கு அந்நாட்டு பிரதமர் மிட்சோடகிஸ் மக்களிடம் மன்னிப்பு கோரி உள்ளார்.
Next Story