ரயில் வரும் போது தண்டவாளத்தில் பெண்ணைத் தள்ளி விட்ட மர்ம நபர் - பதைபதைக்க வைக்கும் காட்சிகள்

பெல்ஜியம் நாட்டில் ரயில் வரும்போது பெண்ணை மர்ம நபர் ஒருவர் தண்டவாளத்தில் தள்ளி விட்ட காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
x
பெல்ஜியம் தலைநகர் பிரஸல்ஸ் நகரில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயிலுக்காகப் பெண் ஒருவர் காத்திருந்தார். அப்போது சரியாக ரயில் வந்த சமயம் பார்த்து பின்னால் இருந்த மர்ம நபர், அப்பெண்ணை திடீரென தண்டவாளத்தில் தள்ளி விட்டார். 

சற்றும் எதிர்பாராத இந்த சூழலில், மெட்ரோ ரயில் ஓட்டுநர் உடனடியாக ரயிலை நிறுத்தியதால் அப்பெண் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதனைத்தொடர்ந்து கீழே விழுந்த அப்பெண் உயிருக்கு பாதிப்பின்றி காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். 

இதனிடையே அப்பெண்ணை தள்ளி விட்ட மர்ம நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 


Next Story

மேலும் செய்திகள்