அமெரிக்காவில் ஒரே நாளில் 10.4 லட்சம் பேருக்கு கொரோனா

அமெரிக்காவில் ஒரே நாளில் பத்தரை லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
x
அமெரிக்காவில் ஒரே நாளில் 10.4 லட்சம் பேருக்கு கொரோனா

அமெரிக்காவில் ஒரே நாளில் பத்தரை லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்நாட்டில் புதிதாக 10 லட்சத்து 48 ஆயிரத்து 375 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கையும் 2 மடங்காக உயர்ந்து ஒன்றரை லட்சத்தை நெருங்கிய நிலையில், சுகாதாரப் பணியாளர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒமிக்ரான் பரவல் அதிகரிப்பால் மக்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள மருத்துவமனைகளை நாடும் சூழலில், ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்