சர்வதேச பலூன் திருவிழா - "அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறும்"

சர்வதேச பலூன் திருவிழா, அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச பலூன் திருவிழா - அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெறும்
x
சர்வதேச பலூன் திருவிழா, மெக்ஸிகோ நாட்டின் லியோன் நகரில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பலூன் திருவிழா, மெக்ஸிக்கோவின் குவானா மாகாணத்தில் நடைபெற்றது. ஒன்பது நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில், 200க்கும் மேற்பட்ட பலூன்கள் பறக்க விடப்பட்டன. இதனிடையே, அடுத்த ஆண்டுக்கான சர்வதேச பலூன் திருவிழா தமிழகத்தில் நடைபெறும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், இது குறித்து ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுற்றுலாத்துறை சார்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. 




Next Story

மேலும் செய்திகள்