இது 7வது விருது... மெஸ்ஸியின் புதிய சாதனை

கால்பந்து போட்டியில் சிறந்த வீரருக்கான விருதை 7வது முறையாக லியோனல் மெஸ்ஸி வென்று சாதனை படைத்துள்ளார்
x
கால்பந்து போட்டியில் சிறந்த வீரருக்கான விருதை 7வது முறையாக லியோனல் மெஸ்ஸி வென்று சாதனை படைத்துள்ளார்

கால்பந்து போட்டியில் சிறப்பாக செயல்படும் வீரருக்கு ஆண்டுதோறும் பாலன் டி ஓர் விருது வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா பரவலால் கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி பாரிஸில் நேற்று நடைபெற்றது. கடந்த சீசனில் 48 போட்டிகளில் விளையாடி 38 கோல்களை பதிவு செய்த மெஸ்ஸி, ஒட்டுமொத்தமாக 613 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்தார். இதனால் சிறந்த வீரருக்கான பேலன் டி ஆர் விருது மெஸ்ஸிக்கு வழங்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு இந்த விருதை வென்ற போது, அதிகமுறை வென்ற வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்தார். இவருக்கு அடுத்தபடியாக கிறிஸ்டியானோ ரொனால்டோ 5 முறை வென்று இரண்டாவது இடத்தில் உள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்