தென் ஆப்பிரிக்காவில் இருந்து திரும்பியவர்கள் - ஒருவருக்கு உருமாற்றம் அடைந்த வைரஸ் பாதிப்பா?

தென் ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த வாரம் கர்நாடகா திரும்பியிருந்த இரண்டு பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது.
x
தென் ஆப்பிரிக்காவில் இருந்து கடந்த வாரம் கர்நாடகா திரும்பியிருந்த இரண்டு பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதியானது. இதில் ஒருவருக்கு டெல்டா வகை வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் மற்றொருவரிடம் எடுக்கப்பட்ட மாதிரியில் உருமாற்றம் அடைந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாக சந்தேகம் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து அது எந்த மாதிரியான கொரோனா வகையைச் சேர்ந்தது என கண்டறிய அந்த நபரின் மாதிரிகளை மரபணு வரிசைப்படுத்தலுக்கு கர்நாடக சுகாதாரத்துறை அனுப்பியுள்ளது. இதை கர்நாடகா சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகரும் உறுதி செய்துள்ளார். பாதிக்கப்பட்ட 2 பேரும் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்