வேகமாக பரவும் பி.1.1.529 வகை கொரோனா - உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை
பிரிட்டனில், 2 பேருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக, அந்நாட்டு சுகாதாரத்துறை செயலர் சஜித் ஜாவித் தெரிவித்து உள்ளார்.
இருவரும் தென் ஆப்பிரிக்காவில் இருந்து பயணம் மேற்கொண்டவர்கள் எனவும், அவர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், ஜெர்மனியிலும் இருவருக்கு ஒமிக்ரான் வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதாக, அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட, உருமாற்றம் அடைந்த ஒமிக்ரான் வகை கொரோனா வைரஸ், அதிவேகமாக பரவக்கூடியதாக இருப்பதாக, மருத்துவ நிபுணர்கள் கவலை தெரிவித்து உள்ள நிலையில், உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
Next Story