ரஷ்ய பாதுகாப்பு குழு தலைவர் இலங்கை பயணம் - அதிபர் கோத்தபய ராஜபக்சே உடன் சந்திப்பு
இலங்கை சென்றுள்ள ரஷ்ய பாதுகாப்பு குழு தலைவர், அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்சேவை சந்தித்து பேசினார்.
இலங்கை சென்றுள்ள ரஷ்ய பாதுகாப்பு குழு தலைவர், அந்நாட்டு அதிபர் கோட்டாபய ராஜபக்சேவை சந்தித்து பேசினார். கொழும்பில் உள்ள அதிபர் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. கொரோனா காலத்தில் இலங்கைக்கு ரஷ்யா அளித்த உதவிகளுக்கு அதிபர் கோட்டாபய ராஜபக்சே நன்றி தெரிவித்தார். கொழும்பு துறைமுகம், மருந்து உற்பத்தி, தகவல் தொழிநுட்பம், விவசாயம் உள்ளிட்ட துறைகளில் முதலீடு செய்ய ரஷ்ய முதலீட்டாளர்களுக்கு இலங்கை அதிபர் அழைப்பு விடுத்தார். மேலும், தீவிரவாத எதிர்ப்பு தொடர்பாக, ரஷ்யாவுடனான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தவும் கோட்டாபய ராஜபக்சே விருப்பம் தெரிவித்தார்.
Next Story