ஹைதி அதிபர் கொலை வழக்கு - கைதான நபர் கொரோனாவால் மரணம்

ஹைதி அதிபர் கொலை வழக்கில் கைதான நபர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதி அதிபர் கொலை வழக்கு - கைதான நபர் கொரோனாவால் மரணம்
x
ஹைதி அதிபர் கொலை வழக்கில் கைதான நபர் கொரோனா தொற்றால் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்நாட்டு அதிபர் ஜொவெனல் மோய்ஸ், கடந்த ஜூலை மாதம் படுகொலை செய்யப்பட்டார். உலகம் முழுவதும் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், 40க்கும் மேற்பட்டோர் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டனர். கைதானவர்களில் ஒருவரான கில்பர்ட் டிராகன், சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில், அவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சுத் திணறலால் அவதிப்பட்டு வந்தார். கில்பர்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்