கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் மீது மோதிய சரக்கு லாரி

பெரு நாட்டில் ஏற்பட்ட கோரமான சாலை விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கட்டுப்பாட்டை இழந்து வாகனங்கள் மீது மோதிய சரக்கு லாரி
x
பெரு நாட்டில் ஏற்பட்ட கோரமான சாலை விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். குபிச்சே பகுதி தேசிய நெடுஞ்சாலையில், சாலையில் சென்று கொண்டிருந்த சரக்கு லாரி, திடீரென கட்டுப்பாட்டை இழந்து, அருகில் சென்ற பேருந்து உள்ளிட்ட இதர வாகனங்கள் மீது, கண்ணிமைக்கும் நேரத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதில், பேருந்து கவிழ்ந்து 2 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும், 30க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான பரபரப்பான் சிசிடிவி காட்சிகள் தற்பொழுது வெளியாகியுள்ளன. 


Next Story

மேலும் செய்திகள்