உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல் - நூலிழையில் உயிர் தப்பிய இந்திய வீரர்கள்
உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீரர்கள் உள்பட 54 இந்திய வீரர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
உகாண்டாவில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 9 தமிழக வீரர்கள் உள்பட 54 இந்திய வீரர்கள் நூலிழையில் உயிர் தப்பியுள்ளனர்.
உகாண்டா தலைநகர் கம்பாலாவில் உலக பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றன. இதற்காக தமிழக வீரர்கள் 9 பேர் உள்பட 54 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அங்கு சென்றிருந்தது. இந்த நிலையில், வீரர்கள் தங்கியிருந்த அறைக்கு அருகே திடீரென வெடிகுண்டு வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக வீரர்கள் காயம் இன்றி உயிர் தப்பினர்.
Next Story