இலங்கையில் கடும் மழை - 25 பேர் பலி; 2,12,060 - க்கும் அதிகமானோர் பாதிப்பு

இலங்கையில் பெய்துவரும் கடும் மழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் கடும் மழை - 25 பேர் பலி; 2,12,060 - க்கும் அதிகமானோர் பாதிப்பு
x
இலங்கையில் பெய்துவரும் கடும் மழையால்  உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. 17 மாவட்டங்களில் கடும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தேசிய பேரிடர் முகமை தெரிவித்துள்ளது. இதன்படி, 60 ஆயிரத்து 264 - க்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த 2 லட்சத்து 12 ஆயிரத்து 60 -க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கண்டி, கேகாலை, குருநாகல், ஆகிய மூன்று மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்