ராணுவ வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை... தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை - ஆப்கான் பெற்றோர் வேதனை

ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தில் இருந்து அமெரிக்க ராணுவ வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தையானது தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ராணுவ வீரர்களிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை... தற்போது வரை கண்டுபிடிக்கப்படவில்லை - ஆப்கான் பெற்றோர் வேதனை
x
தலிபான்கள் காபூலைக் கைப்பற்றியது போது, பலர் விமான நிலைய சுற்றுச் சுவரில் ஏறி தப்ப முயன்றனர். அதில் சிலர் குழந்தைகளை மட்டும் அமெரிக்க இராணுவ வீரர்களிடம் ஒப்படைத்த காட்சிகள் வெளியாகின. அவ்வாறு அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றிய மிர்சா அலி என்பவரது குழந்தை அமெரிக்க இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், தற்போது வரை அக்குழந்தை கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்