அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்கும் அதி நவீன ட்ரோன்கள்

இந்தியா - அமெரிக்கா இடையிலான டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தையின் போது, எம்.கியூ. 9பி பிரிடேட்டர் ரக தாக்குதல் ட்ரோன்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்கும் அதி நவீன ட்ரோன்கள்
x
இந்தியா - அமெரிக்கா இடையிலான டூ பிளஸ் டூ பேச்சுவார்த்தையின் போது, எம்.கியூ. 9பி பிரிடேட்டர் ரக தாக்குதல் ட்ரோன்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாகிஸ்தான், சீனா என இருமுனைப் போர் வந்தாலும், அதனை சமாளிக்கும் வகையில் இந்தியா எல்லையில் ராணுவ கட்டமைப்புகளையும், உள்கட்டமைப்புகளையும் பலப்படுத்தி வருகிறது.

சீனா ஏற்கனவே தனது ராணுவத்தில் விங்-லூங் 2 ரக ஆளில்லா விமானங்களான ட்ரோன்களை பயன்படுத்தும் நிலையில், பாகிஸ்தானோ சீனாவிடம் இருந்தும், துருக்கியிடம் இருந்தும் ட்ரோன்களை வாங்கி குவிக்கிறது.
 
இந்நிலையில் நவீன ரக ட்ரோன்களின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டமிட்டுள்ள இந்தியா, 22 ஆயிரம் கோடி ரூபாயில் மதிப்பில் அமெரிக்காவிடம் இருந்து 30 எம். கியூ. 9பி பிரிடேட்டர் ரக ட்ரோன்களை வாங்க ஆர்வம் காட்டுகிறது.
 
வரும் டிசம்பரில் இந்தியா மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான டு பிளஸ் டு பேச்சுவார்த்தை வாஷிங்டன்னில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இந்நிலையில் எம். கியூ. 9பி பிரிடேட்டர் ரக ட்ரோன்களை வாங்குவது தொடர்பான அறிவிப்பை வெளியிட இந்திய கடற்படை, பாதுகாப்பு கொள்முதல் கவுன்சிலை நாடலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

ஏற்கனவே இந்த ரக ட்ரோன்கள் 2, இந்திய கடற்படையில் குத்தகை அடிப்படையில் சேவையில் உள்ளன. எம். கியூ. 9பி பிரிடேட்டர் ரக ட்ரோன்களை அமெரிக்காவின் ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

கடந்த செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போது இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி விவேக் லாலை சந்தித்து பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

அமெரிக்காவின் எம்.கியூ. 9பி பிரிடேட்டர் ட்ரோன் எதிரிகளை வேட்டையாடுவதில் துல்லியமானது மற்றும் அபாயகரமானது. 

ஈராக்கில் கடந்த 2020 ஆம் ஆண்டு ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை கொல்ல இந்த ரக ட்ரோனையே அமெரிக்கா பயன்படுத்தியிருந்தது. கட்டுப்பாட்டு அறையிலிருந்து இயக்கப்படும் இந்த ட்ரோன் 2 ஆயிரத்து 223 கிலோ எடை கொடண்டது.

மணிக்கு 482 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் இந்த ட்ரோன், 50 ஆயிரம் அடி உயரத்தில் பறக்க வல்லது.  செயற்கைகோளுடன் நேரடியாக இணைக்கப்படும் ட்ரோன் தாக்குதல் இலக்கை துல்லியமாக படம் எடுத்து அனுப்பும். தாக்குதல் கட்டளை பிறப்பிக்கப்பட்டதும் சத்தம் எழுப்பாமல் 800 அடி உயரம் வரையில் கீழ் இறங்கி ஏவுகணைகளை வீசிவிட்டு மேல் எழும்பும்.

வீசிய ஏவுகணையில் எதிரியின் இலக்கு தாக்கப்பட்டுவிட்டதாக என்பதை தெளிவு செய்ய பாதிப்பையும் புகைப்படம் எடுத்துவிடும். எதிரிகளின் ஆயுத பலத்தை கண்டறிய உளவு விமானமாகவும் செயல்படும். தொலைபேசி உரையாடல்களையும் இடைமறித்து ஒட்டுக்கேட்கும் என்றும்  மோசமான வானிலையிலும் செயல்பட வல்லது என்றும் அமெரிக்க விமானப்படை கூறுகிறது. உலகின் மிகவும் அபாயகரமான ட்ரோனாக பார்க்கப்படும், எம்.கியூ. 9பி பிரிடேட்டர் ட்ரோன்கள் இந்திய படைகளுக்கு மேலும் வலுசேர்க்கும் என்றே பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்