மீண்டும் சொந்த நாடு திரும்பிய சிற்பத்தால் நைஜீரியர்கள் மகிழ்ச்சி

பிரிட்டிஷ் துருப்புகளால் கொண்டு செல்லப்பட்ட வெண்கல சிற்பம் மீண்டும் தங்கள் நாட்டிற்கே கொண்டு வரப்பட்டுள்ளதால் நைஜீரிய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மீண்டும் சொந்த நாடு திரும்பிய சிற்பத்தால் நைஜீரியர்கள் மகிழ்ச்சி
x
பிரிட்டிஷ் துருப்புகளால் கொண்டு செல்லப்பட்ட வெண்கல சிற்பம் மீண்டும் தங்கள் நாட்டிற்கே கொண்டு வரப்பட்டுள்ளதால் நைஜீரிய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 1897ல் பிரிட்டிஷ் படைகளால் சூறையாடப்பட்ட பல வெண்கல சிற்பங்கள் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளன. கொள்ளையடிக்கப்பட்ட கலைப்பொருட்களை மீண்டும் திருப்பித் தர வேண்டும் என்று பல தரப்பினரும் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வந்தனர். இந்நிலையில், ஆப்பிரிக்க கலாச்சார பாரம்பரியத்தின் ஒரு பகுதியான இளம் சேவலின் வெண்கல சிற்பம் மீண்டும் நைஜீரியாவுக்கே கொண்டு வரப்பட்ட நிலையில், அந்நாட்டு மக்கள் இதைக் கொண்டாடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்