உல்லாச விடுதியில் துப்பாக்கிச் சூடு; போதைப்பொருள் கும்பல்களுக்கிடையே மோதல் - இந்தியப்பெண் உட்பட இருவர் பலி

மெக்சிகோவில் உல்லாச விடுதியில் நடந்த துப்பாகிச் சூடு சம்பவத்தில் ஒரு இந்தியப் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்த நிலையில், உணவகத்தை போலீசர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
உல்லாச விடுதியில் துப்பாக்கிச் சூடு; போதைப்பொருள் கும்பல்களுக்கிடையே மோதல் - இந்தியப்பெண் உட்பட இருவர் பலி
x
மெக்சிகோவில் உல்லாச விடுதியில் நடந்த துப்பாகிச் சூடு சம்பவத்தில் ஒரு இந்தியப் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்த நிலையில், உணவகத்தை போலீசர் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர். துலுமில், போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே நடைபெற்ற பயங்கரமான துப்பாக்கிச் சூட்டில், அங்கு உணவு அருந்திக் கொன்டிருந்த இந்திய பெண் மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பெண்ணின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து பரிதாபமாக இறந்தனர். மேலும், ஜெர்மனியைச் சேர்ந்த இருவரும், நெதர்லாந்தைச் சேர்ந்த ஒருவரும் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, அந்த உல்லாச விடுதி, முழுமையாக காவல்துறை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டதாகவும், தொடர் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்