இராணுவத்தினர் சென்ற பேருந்தின் மீது தாக்குதல் - பதிலடி கொடுத்த இராணுவம்

சிரியாவின் டமாஸ்கசில் இராணுவ வீரர்கள் சென்ற பேருந்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடியாக, கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து சிரிய பாதுகாப்பு படையினர் வான்வெளி தாக்குதல் நடத்தியுளனர்.
இராணுவத்தினர் சென்ற பேருந்தின் மீது தாக்குதல் - பதிலடி கொடுத்த இராணுவம்
x
சிரிய அரசுப்படையினருக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் கடந்த சில நாட்களாக மோதல் அதிகரித்து வரும் நிலையில், டமாஸ்கசில் ராணுவ வீரர்கள் பயணித்த பேருந்தைக் குறி வைத்து கிளர்ச்சியாளர்கள் நேற்று வெடிகுண்டு தாக்குதல் ஒன்றை நடத்தினர். இதில், 14 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக, கிளர்ச்சியாளர்களைக் குறிவைத்து சிரிய பாதுகாப்பு படையினர் வான்வெளி தாக்குதல் நடத்தினர். கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள இட்லிப் மாகாணத்தின் அரிபா நகரில், சிரியா விமானப்படை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில், 4 குழந்தைகள் உட்பட 11 பேர் பலியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்