ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா பரவல் - ஊதியத்துடன் கூடிய 1 வார விடுமுறை
ரஷ்யாவில் கொரோனா இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பணியாளர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 1 வார விடுமுறை அளித்து புதின் அரசு உத்தரவிட்டுள்ளது.
ரஷ்யாவில் புதிதாக 34 ஆயிரத்து 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஆயிரத்து 28 பேர் தொற்ரு பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பாதிப்பு 80 லட்சத்து 94 ஆயிரத்து 825 ஆகவும், மொத்த இறப்பு 2 லட்சத்து 26 ஆயிரத்து 353 ஆகவும் உயர்ந்துள்ளது. தினசரி பாதிப்புகள் சமீப காலமாக உயர்ந்து வருவதன் காரணமாக அதைக் கட்டுப்படுத்த ரஷ்ய அரசு தீவிரமாக முயற்சித்து வருகிரது. அந்த வகையில், பணியாளர்கள் யாரும் 1 வாரம் வேலைக்கு வர வேண்டியதில்லை என்று கூறி ஊதியத்துடன் கூடிய 1 வார விடுமுறையை ரஷ்ய அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறையானது வரும் 30ம் தேதி முதல் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story