ஹைதியில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் - தேடும் பணிக்காக குழுவை அனுப்பிய அமெரிக்கா
ஹைதியில் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ ஊழியர்கள் 17 பேர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பான நிலையில், அவர்களைத் தேடும் பணிக்காக ஹைதிக்கு அமெரிக்கா குழு ஒன்றை அனுப்பியுள்ளது.
ஹைதியில் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ ஊழியர்கள் 17 பேர் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பான நிலையில், அவர்களைத் தேடும் பணிக்காக ஹைதிக்கு அமெரிக்கா குழு ஒன்றை அனுப்பியுள்ளது. தலைநகர் போர்ட் அவ் பிரின்சில் உள்ள தேவாலயத்தில் பணியாற்றி வந்த அமெரிக்க கிறிஸ்தவ ஊழியர்கள் குடும்பத்தோடு ஆதரவற்றோர் இல்லத்திற்கு சென்று விட்டு வரும் வழியில், மர்ம கும்பல் ஒன்று அவர்களை வழிமறித்து சிறுவர்கள் உட்பட 17 பேரைக் கடத்தியது. இச்சம்பவம் பூதாகரமான நிலையில், தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. அவர்களுக்கு உதவ அமெரிக்கா சிறப்பு குழு ஒன்றை ஹைதிக்கு அனுப்பியுள்ளது.
Next Story