துர்கா பூஜையின் போது வெடித்த வன்முறை - சூறையாடப்பட்ட இந்து கோயில்கள், வீடுகள்

இந்தியாவின் அண்டைய நாடான வங்கதேசத்தில் துர்கா பூஜையின் போது ஏற்பட்ட வன்முறை காரணமாக இதுவரை 66 இந்து வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
துர்கா பூஜையின் போது வெடித்த வன்முறை - சூறையாடப்பட்ட இந்து கோயில்கள், வீடுகள்
x
வங்கதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்கள் நவராத்திரி திருவிழா கொண்டாட்டத்தில் ஈடுபட்ட போது, குரான் புத்தகம் இழிவுபடுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியானது. இதனால் தலைநகர் டாக்கா அருகே வெடித்த வன்முறையில் இந்து கோயில்கள் சூறையாடப்பட்டன. மேலும், 66 இந்து வீடுகள் சேதப்படுத்தப்பட்டது மட்டுமின்றி 20க்கும் மேற்பட்ட இந்துக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன. இந்நிலையில், இந்துக்கள் மீதான தாக்குதலுக்கு ஐநாவும், அமெரிக்காவும் தங்கள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். வங்கதேசத்தில் கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் சிறுபான்மையினர் மீது மூவாயிரத்து 721 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. அங்கு கடந்த 2014 ஆம் ஆண்டு அதிகபட்சமாக ஆயிரத்து 201 சிறுபான்மையினரின் வீடுகள் சூறையாடப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


Next Story

மேலும் செய்திகள்