பிரிட்டனில் டேங்கர் ஓட்டுநர்களுக்கு கடும் பற்றாக்குறை - வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு அழைப்பு

பிரிட்டனில் லாரி ஓட்டுநர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்
பிரிட்டனில் டேங்கர் ஓட்டுநர்களுக்கு கடும் பற்றாக்குறை - வெளிநாட்டு ஓட்டுநர்களுக்கு அழைப்பு
x
பிரிட்டனில் லாரி ஓட்டுநர்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பெட்ரோல் பங்குகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதைப் பற்றிய விவரங்களை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்

கடந்த ஜனவரியில் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரட்டன் வெளியேறிய பின், பிரிட்டனில் லாரி ஓட்டுனர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கினால் பல மாதங்களாக ஓட்டுநர் பயிற்சி பள்ளிகள் மூடப்பட்டிருந்தது இந்த பிரச்சனையை மேலும் தீவிரமாக்கியுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எரிபொருள், துறைமுகங்களில் இருந்து நாடு முழுவதும் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல் அனுப்பபடுகிறது.

 ஆனால், டேங்கர் லாரி ஓட்டுநர்களுக்கு கடும் பற்றாகுறை ஏற்பட்டுள்ளதால், பல இடங்களில் பெட்ரோல் விநியோகம் தடைபட்டுள்ளது. பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் நிரப்ப நீண்ட வரிசையில் கார்கள் மற்றும் இதர வாகனங்கள் காத்திருக்கின்றன. சில இடங்களில் பெட்ரோல் பங்குகள் மூடப்பட்டுள்ளன. 

டேங்கர் ஓட்டுனர்கள் பற்றாகுறையை சமாளிக்க வெளிநாடுகளைச் சேர்ந்த டேங்கர் ஓட்டுநர்களுக்கு, 5,000 தற்காலிக விசாக்களை அளிக்க பிரிட்டன் அரசு திட்டமிட்டுள்ளது.

பிரிட்டனில் சுமார் ஒரு லட்சம் கனரக வாகன ஓட்டுனர்கள் தேவைப்படுவதாக லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பிரிட்டனில் நூற்றுக்கணக்கான பெட்ரோல் பங்குகளை நடத்தி வரும் இ.ஜி குழுமம், வாடிக்கையாளர் ஒருவருக்கு அதிகபட்சமாக 30 பவுண்டுகள் மதிப்பிலான பெட்ரோல் 
மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

பிரிட்டனில்  உணவு பொருட்கள் உள்ளிட்ட இதர பண்டங்களின் விநியோகத்தையும் ஓட்டுநர்கள் பற்றாக்குறை, பாதிக்கும் என்று கருதப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்