புதிதாக 1,882 பேருக்குத் தொற்று - ஊரடங்கிற்கு எதிராக வலுக்கும் போராட்டம்

ஆஸ்திரேலியாவில் புதிதாக ஆயிரத்து 882 பேருக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிதாக 1,882 பேருக்குத் தொற்று - ஊரடங்கிற்கு எதிராக வலுக்கும் போராட்டம்
x
ஊரடங்கிற்கு எதிராக போராட்டம் வலுத்து வரும் நிலையில், ஆயிரக்கணக்கான போலீசார்கள் குவிக்கப்பட்டு, போராட்டக்காரர்களை தடுத்து நிறுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல நூற்றுக் கணக்கான மக்கள் மெல்போர்ன் நகரில் போராட்டம் செய்ய குவிந்ததை அடுத்து, போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதாகக் கூறி சிலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், நியு சவுத் வேல்ஸ் மாகாணத்தில் புதிதாக ஆயிரத்து 331 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் சிட்னி நகரைச் சேர்ந்தவர்கள். மேலும், 6 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல், விக்டோரியாவில் புதிதாக 535 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்