அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம் - ஆயிரக்கணக்கானோர் சேர்ந்து ஆர்ப்பாட்டம்
எல் சால்வேடர் நாட்டில், ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டு அதிபர் பியுகெலுக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
எல் சால்வேடர் நாட்டில், ஆயிரக்கணக்கான மக்கள் அந்நாட்டு அதிபர் பியுகெலுக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பியுகெலால் கொண்டு வரப்பட்ட பிட்காயின் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள அவர்கள், அதிபர் மக்களுடன் கலந்தாலோசிக்காமல் சட்டத்தை இயற்றியுள்ளதாக குற்றம் சாட்டினர். மேலும், அதிபர் அளித்த வாக்குறுதிகளுக்கு எதிர்ப்பதமாக நடந்து கொள்வதாகவும், பெருந்தொற்று காலத்தில் தாங்கள் இருந்தாலும் கூட தற்போது போராடுவதற்குக் காரணம், சர்வாதிகாரம் வைரசை விட கொடியது என்பதால் தான் என்று போராட்டக் காரரகள் தெரிவித்தனர். அத்துடன், தங்கள் முன்னோர்கள் ஊழல் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராடியதைப் போல, தாங்களும் போராட விரும்புவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
Next Story