"இலங்கை தொடர்பான அறிக்கை வேதனை தருகிறது" - ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கருத்து

ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொடர்பான அறிக்கை வேதனை தருகிறது - ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கருத்து
x
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் அறிக்கை வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை பிரச்சனை தொடர்பாக வெளியான அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த சுரேஷ் பிரேமச்சந்திரன், இலங்கை தமிழர் பிரச்சனையில், இலங்கை அரசு மீது நம்பிக்கை வைத்துள்ளதாக அறிக்கையில் கூறியிருப்பது தமிழ் மக்களுக்கான நீதி கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் போரை தொடர்ந்து காணாமல் போனவர்கள் விஷயத்தில்  நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் இருந்த மக்களுக்கு மனித உரிமைகள் ஆணையகத்தின் அறிக்கை  வேதனை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்