இளவரசர் ஆன்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க நீதிமன்றத்தில் திங்கள் அன்று வழக்கு விசாரணை

பிரட்டன் ராணியின் இரண்டாவது மகனான இளவரசர் ஆன்ட்ரூ மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
இளவரசர் ஆன்ட்ரூ மீது பாலியல் புகார் - அமெரிக்க நீதிமன்றத்தில் திங்கள் அன்று வழக்கு விசாரணை
x
பிரட்டன் ராணியின் இரண்டாவது மகனான இளவரசர் ஆன்ட்ரூ மீது பாலியல் வன்கொடுமை வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. 

61 வயதான இளவரசர் ஆன்ட்ரூ, பிரட்டன் ராணி எலிசபத்தின் இரண்டாவது மகனும், பட்டத்து இளவரசர் சார்ல்ஸின் இளைய சகோதரரும் ஆவார்.
20 ஆண்டுகளுக்கு முன்பு விர்ஜீனியா கியூப்ரே (Virginia Giuffre) என்ற இளம் பெண்ணை பலாத்காரம் செய்தார் என்று அமெரிக்காவின் நியூயார்க் நகரில்
உள்ள மன்ஹட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தற்போது 38 வயதாகும் விர்ஜீனியா கியூப்ரே (Virginia Giuffre), சிறுமியாக இருந்த போது, லண்டன் நகரில் உள்ள ஒரு தொழிலதிபரின் வீட்டில், இளவரசர் ஆன்ட்ரூவினால் பலாத்காரம் செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
விர்ஜீனியா கியூப்ரே (Virginia Giuffre), அமெரிக்காவைச் சேர்ந்தவர் என்பதால்,
இந்த வழக்கு அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் காணொலி மூலம் ஆஜராகும் படி மன்ஹட்டான் மாவட்ட நீதிமன்றம் அனுப்பிய  
சம்மனை முதலில் வாங்க மறுத்த இளவரசர் ஆண்ட்ரூஸ், பின்னர் அவரின் வழக்கறிஞர்கள் மூலம் இதைப் பெற்றுக் கொண்டதாக விர்ஜீனியா கியூப்ரேவின்(Virginia Giuffre) வழக்கறிஞர் கூறியுள்ளார். வரும் திங்கள் அன்று நடைபெற உள்ள இந்த வழக்கு விசாரணையில் இளவரசர் ஆண்ட்ரூஸ் ஆஜராவாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை. இளவரசர் ஆன்ட்ரூஸ் 1996இல் விவகாரத்து பெற்று, அதன் பிறகு தனியாக வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்