ஆப்கானில் இருந்து மக்களை மீட்கும் பணி - "கூடுதல் வாய்ப்புகளை எதிர்பார்க்கிறோம்" : அமெரிக்கா தகவல்

ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்க கூடுதல் வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆப்கானில் இருந்து மக்களை மீட்கும் பணி - கூடுதல் வாய்ப்புகளை எதிர்பார்க்கிறோம் : அமெரிக்கா தகவல்
x
ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை மீட்க கூடுதல் வாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. நேற்று காபூலில் இருந்து கத்தாரின் டோஹா நகரிற்கு, அமெரிக்கர்கள் உட்பட பலரை ஏற்றி வந்த விமானத்தை வரவேற்ற அமெரிக்க அரசு, ஆப்கானில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான கூடுதல் வாய்ப்புகளை எதிர்பார்த்திருப்பதாகத் தெரிவித்தது. கடந்த மாதம் ஆப்கானில் ஏற்பட்ட குழப்பங்களுக்குப் பிறகு, காபூல் விமான நிலையத்தில் இருந்து 100க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட, சர்வதேச வர்த்தக விமானம் டோஹா வந்தடைந்ததை, அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் நெட் ப்ரைஸ் உறுதி செய்தார்.


Next Story

மேலும் செய்திகள்