மெக்சிகோவில் அடுத்தடுத்து இயற்கை பேரிடர் - கொட்டித் தீர்த்த கனமழை,சக்திவாய்ந்த நிலநடுக்கம்

மெக்சிகோவில் கனமழை வெள்ளம், சக்திவாய்ந்த நிலநடுக்கம் என அடுத்தடுத்து நேரிட்ட இயற்கை பேரிடரால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
மெக்சிகோவில் அடுத்தடுத்து இயற்கை பேரிடர் - கொட்டித் தீர்த்த கனமழை,சக்திவாய்ந்த நிலநடுக்கம்
x
மெக்சிகோவில் கனமழை வெள்ளம், சக்திவாய்ந்த நிலநடுக்கம் என அடுத்தடுத்து நேரிட்ட இயற்கை பேரிடரால் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

மெக்சிகோவின் மத்திய மாநிலங்களில் கொட்டி தீர்த்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் வாகனங்கள் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்றும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 2 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகள் வெள்ளத்தால் சேதம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

துலா நகரில் வெள்ளப்பெருக்கில் மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், மருத்துவ பணியாளர்கள் நோயாளிகளை வெளியேற்றினர். இருப்பினும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்தவர்கள் உள்பட 17 நோயாளிகள் உயிரிழந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்