ரஷ்ய கூட்டமைப்பு அதிகாரி இந்தியா வருகை - மோடியை சந்தித்த நிகோலாய் பட்ரூஷேவ்

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு குழு செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ் சந்தித்தார்.
ரஷ்ய கூட்டமைப்பு அதிகாரி இந்தியா வருகை - மோடியை சந்தித்த நிகோலாய் பட்ரூஷேவ்
x
 அப்போது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் வெளியுறவு அமைச்சரை சந்தித்தபோது நடைபெற்ற கருத்து பரிமாற்றங்கள் குறித்து பிரதமர் மோடியிடம், நிகோலாய் பட்ருஷேவ் விளக்கினார்.  இந்திய-ரஷ்ய உறவின் மீது தொடர்ந்து கவனம் செலுத்தி வரும் அதிபர் புடினுக்கு தமது நன்றியை தெரிவிக்குமாறு பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இருதரப்பு உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தியா வரவுள்ள அதிபர் புடினின் வருகையை தாம் ஆவலுடன் எதிர்பார்ப்பதாக பிரதமர் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்