குவைத்தில் டயர்கள் மறுசுழற்சி - டைல்ஸாக மாற்றப்படும் டயர்கள்
குவைத்தில் மலை போல் குவிக்கப்பட்டிருக்கும் பழைய டயர்களை மறுசுழற்சி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 4 கோடி டயர்கள் மறுசுழற்சி செய்யப்படும் பணிகள் பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு.
குவைத்தில் மலை போல் குவிக்கப்பட்டிருக்கம் பழைய டயர்களை மறுசுழற்சி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. 4 கோடி டயர்கள் மறுசுழற்சி செய்யப்படும் பணிகள் பற்றி விவரிக்கிறது, இந்த தொகுப்பு.
குவைத்தில் அர்ஹியா என்ற பாலைவனப் பகுதி தான் இது. மண் பரப்பு தெரியாத அளவிற்கு, வாகனங்களில் பயன்படுத்தப்பட்ட சுமார் 4.2 கோடி டயர்கள் இங்கே குவிக்கப்பட்டுள்ளன. குவைத் முழுவதும் இருந்து பல வருடங்களாக பழைய டயர்கள் இந்த பகுதிக்கு அனுப்ப்பட்டு, திறந்தவெளியில்
கொட்டப்பட்டன.
இவற்றில் அவ்வப்போது ஏற்படும் தீ விபத்துகளில் வெளியாகும் கரும்புகையினால் பல கிலோ மீட்டர் தூரம் உள்ள குடியிருப்பு பகுதிகளில் வசிப்பவர்களும் கடுமையான பாதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், இந்த டயர்கள் அனைத்தையும் சவுதி அரேபியா எல்லைக்கு அருகே உள்ள அல் சலாமி என்ற இடத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு அமைந்துள்ள ஒரு தொழிற்சாலையில், எந்திரங்கள் மூலம் தரையில் பதிக்கும் டைல்ஸாக மாற்றப்படுகின்றன.
எப்ஸ்கோ நிறுவனத்தின் தொழிற்சாலையில், டையர்கள் முதலில் அரவை செய்யப்பட்டு, துகள்களாக மாற்றப்படுகின்றன.
பின்னர் வேறு சில எந்திரங்கள் மூலம் அந்த துகள்கள், டைல்ஸாக மாற்றப்படுகின்றன. ஆண்டுக்கு 30 லட்சம்
டையர்களை இந்த தொழிற்சாலையில் டைல்ஸாக மாற்ற முடியும் என்று இதன் தலைமை செயல் அதிகாரி அலா ஹாசன் கூறுகிறார்.
சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பழைய டையர்களை, நுகர்பொருளாக மாற்றுவதன் மூலம் இந்தத் தொழிற்சாலை, சமூதாயத்திற்கு பெரும் நன்மையை ஏற்படுத்துவதாக கூறுகிறார்.
அல் சலாமி பகுதி டையர்களை மறுசுழற்சி செய்யும் மையமாக உருவெடுக்கும் என்று குவைத் அரசு எதிர்பார்க்கிறது. 45 லட்சம் மக்கள் தொகை கொண்ட குவைத்தில் மொத்தம் 24 லட்சம் வாகனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story