ஆப்கானிஸ்தானில் மீட்புப் பணிகள் - தலிபான்களுடன் பேச்சுவார்த்தை : ஜெர்மன் அதிபர் விருப்பம்

ஆப்கானில் மீட்புப் பணிகள் குறித்து தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஜெர்மனி அதிபர் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் மீட்புப் பணிகள் - தலிபான்களுடன் பேச்சுவார்த்தை : ஜெர்மன் அதிபர் விருப்பம்
x
ஆப்கானில் மீட்புப் பணிகள் குறித்து தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஜெர்மனி அதிபர் தெரிவித்துள்ளார். தலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றிய பின்பு, லட்சக்கணக்கான மக்கள் அந்நாட்டை விட்டு வெளியேறினர். பல நாடுகளும் மீட்புப் பணிகளை மேற்கொண்டன. இந்நிலையில், ஜெர்மனிக்காக பணியாற்றிய மக்களை எப்படி பாதுகாப்பாக மீட்பது என்பது குறித்து, தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று ஜெர்மன் அதிபர்  ஏஞ்சலா மெர்க்கல் தெரிவித்துள்ளார். மேலும், ஜெர்மனியின் மேம்பாட்டு  அமைப்புகளுக்காக பணியாற்றிவிட்டு தற்போது அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும் மக்களை நாம் கண்டிப்பாக மீட்க வேண்டும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்