நியூசிலாந்து கத்திக்குத்து சம்பவம் - தாக்குதல் நடத்திய தீவிரவாதி சுட்டுக் கொலை

நியூசிலாந்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய தீவிரவாதி, இலங்கையின் காத்தான்குடி பகுதியை சேர்ந்தவர் என்று கண்டறியப்பட்டு உள்ளது.
நியூசிலாந்து கத்திக்குத்து சம்பவம் - தாக்குதல் நடத்திய தீவிரவாதி சுட்டுக் கொலை
x
நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் உள்ள விற்பனை நிலையத்தில் தீவிரவாதி ஒருவர், மக்களை சரமாரியாக கத்தியால் குத்தினார். இதில் 6 பேர் காயம் அடைந்த நிலையில், தீவிரவாதியை நியூசிலாந்து போலீசார் சுட்டுக் கொன்றனர். முதற்கட்ட விசாரணையில் அந்த தீவிரவாதி, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர் என்றும், அவர் இலங்கையை சேர்ந்த முகமது சம்சுதீன் ஆதில் என்றும் தெரியவந்தது. இந்நிலையில், அந்த தீவிரவாதி இலங்கையின் காத்தான்குடியை சேர்ந்தவர் என்று இலங்கை புலனாய்வுத் துறையினர் கூறி உள்ளனர். இதேபோல், கடந்த  2011-ஆம் ஆண்டு நியூஸிலாந்தில் அவர் குடியேறியதும், பல்வேறு குற்றச் செயல்களில் அவர் கைதாகி கண்காணிப்பு வளையத்தில் இருந்ததும் தெரியவந்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்