பொது இடங்களுக்குச் செல்ல கொரோனா தடுப்பூசி சான்றிதழ் அவசியம் - பொதுமக்கள் எதிர்ப்பு
பாரிசில் கட்டாய கொரோனா தடுப்பூசி சான்றிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர்.
பாரிசில் கட்டாய கொரோனா தடுப்பூசி சான்றிதழுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம் நடத்தினர். கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று இருந்தால் மட்டுமே பொது இடங்களுக்குச் செல்ல அனுமதி என்று பிரான்ஸ் அரசு அறிவித்திருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆயிரக்கணக்கான மக்கள், அதிபர் இமானுவேல் மேக்ரானைப் பதவி விலகக் கோரி பாரிசில் போராட்டம் நடத்தினர். அப்போது பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாகக் கூறி போராட்டக் காரர்களைப் போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story