படகில் 301 கிலோ ஹெராயின் கடத்தல் - 4 பாகிஸ்தானியர்கள் உட்பட 7 பேர் கைது

பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு படகில் 301 கிலோ ஹெராயின் கடத்திய 4 பாகிஸ்தானியர்கள் உட்பட7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
படகில் 301 கிலோ ஹெராயின் கடத்தல் - 4 பாகிஸ்தானியர்கள் உட்பட 7 பேர் கைது
x
பாகிஸ்தானில் இருந்து இலங்கைக்கு படகில் 301 கிலோ ஹெராயின் கடத்திய 4 பாகிஸ்தானியர்கள் உட்பட7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கை, இந்திய கடல் பரப்பில் ஹெராயின் போதைப் பொருள் கடத்தலை தடுக்க கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி ஒரு படகை சுற்றி வளைத்து பிடித்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. படகில் 301 கிலோ ஹெராயின் போதைப் பொருள் இருப்பது தெரியவந்தது. போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 4 பேர் உட்பட 7 பேரை கைது செய்தனர். இதையடுத்து, இவர்களை மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். 



Next Story

மேலும் செய்திகள்