பாராலிம்பிக் போட்டிகள் நாளை தொடக்கம்: கொரோனாவுக்கு மத்தியில் பாராலிம்பிக்

கொரோனா பரவலுக்கு மத்தியில் ஜப்பானின் டோக்கியோ நகரில் பாராலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்க உள்ளன.
பாராலிம்பிக் போட்டிகள் நாளை தொடக்கம்: கொரோனாவுக்கு மத்தியில் பாராலிம்பிக்
x
மாற்றுத் திறனாளி விளையாட்டு வீரர்களுக்கான பாராலிம்பிக் போட்டிகள், டோக்கியோ நகரில் நாளை தொடங்கி, அடுத்த மாதம் 5-ம் தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 160 நாடுகளை சேர்ந்த 4 ஆயிரத்து 400 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். பாராலிம்பிக்கில் இந்தியா சார்பில் 54 மாற்றுத் திறனாளி வீரர்கள், 9 விளையாட்டுகளில் கலந்து கொள்ளகின்றனர். இந்திய அணிக்கு தமிழக தடகள வீரர் மாரியப்பன் தலைமை தாங்க உள்ளார். கொரோனா தொற்றுப் பரவலால் பாராலிம்பிக் போட்டியிலும் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா அச்சத்தால் பல்வேறு நாடுகள் பாராலிம்பிக்கில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்